search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரித்து கொல்லப்பட்டவர்"

    செங்கல்பட்டு அருகே எரித்து கொல்லப்பட்டவர் கேரள கல்லூரி மாணவியா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்துவந்தவர் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் (வயது 20). இவர் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி அவர் மாயமானார்.

    இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேஸ்னாவை தேடிவந்தனர். இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. காணாமல்போன கல்லூரி மாணவி ஜோஸ்னா குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை தாலுகா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

    கேரள மாநிலத்தில் காணாமல்போன ஜேஸ்னாவின் வயது, உயரம், எடை உடலில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் கொல்லப்பட்ட பெண்ணின் உடலிலும் காணப்பட்டது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, கேரள போலீசாரிடம் இந்த கொலை தொடர்பாக தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் கேரள போலீசார் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு விசாரணை மேற்கொள்ள வருகின்றனர். அவர்கள் வந்து அந்த உடலை பார்வையிட்ட பின்னரே அது மாணவி ஜோஸ்னாவா என்பது தெரியவரும்.

    ×